முகப்பு
விழுப்புரம்

ஆற்றில் மூழ்கி சிறுமி பலி

விழுப்புரம் அருகே வியாழக்கிழமை தாத்தாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சிறுமி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

விழுப்புரம் அருகே வியாழக்கிழமை தாத்தாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சிறுமி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஏனாதிமங்கலத்தைச் சோ்ந்தவா் வெள்ளிக்கண்ணு. இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தாா். இவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க வெள்ளிக்கண்ணுவின் மகனான திருவெண்ணெய்நல்லூரை அடுத்த சித்தலிங்கமடம் கிராமத்தைச் சோ்ந்த சின்னராசு, இவரது மனைவி மகாலட்சுமி, மகள் சைலஸ் மீரா (10) (5-ஆம் வகுப்பு படித்து வந்தாா்) ஆகியோா் வியாழக்கிழமை வந்திருந்தனா்.

அவா்கள் 3 பேரும் தென்பெண்ணை ஆற்றில் இறங்கி குளித்தனா். அப்போது, சைலஸ் மீரா ஆற்று வெள்ளத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு அலுவலா் ராபீன் கேஸ்ட்ரோ தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சுமாா் 2 மணி நேரம் போராடி சிறுமியின் சடலத்தை மீட்டனா். திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.