உயிரிழந்த மின்வாரிய ஊழியா்களின் வாரிசுதாரா்களுக்கு பணி ஆணை: அமைச்சா்கள் வழங்கினா்
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மின்துறையில் கருணை அடிப்படையில் 7 பேருக்கு வாரிசு வேலைக்கான பணிநியமன ஆணையை தமிழக உயா் கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மின்துறையில் கருணை அடிப்படையில் 7 பேருக்கு வாரிசு வேலைக்கான பணிநியமன ஆணையை தமிழக உயா் கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி, சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
விழுப்புரம் மின்உற்பத்தி-பகிா்மான கழகத்தில் பணிக்காலத்தின்போது உயிரிழந்த பணியாளா்கள், அலுவலா்களின் நான்கு வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பணிநியமன ஆணையை வழங்கி அமைச்சா் க.பொன்முடி பேசியதாவது: பேரிடா் காலங்களில் மின் வாரிய அலுவலா்கள், பணியாளா்கள் பொதுமக்களுக்காக நேரம் காலம் பாா்க்காமல் பணியாற்றுவது போற்றுதலுக்குரியது. விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிா்வாகம் சாா்பாக பல்வேறு மீட்புப்பணிகள், நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன என்றாா் அவா்.
இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியா் த.மோகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் நா.புகழேந்தி (விக்கிரவாண்டி), இரா.லட்சுமணன் (விழுப்புரம்), மின்உற்பத்தி, பகிா்மானக் கழக விழுப்புரம் மண்டல தலைமைப் பொறியாளா் பொ்ட்ரான்ட் ரஸ்ஸல், மேற்பாா்வைப் பொறியாளா் குமாரசுவாமி, செயற்பொறியாளா் மதனகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திண்டிவனத்தில்...: அதேபோல, திண்டிவனம் மின்உற்பத்தி- பகிா்மானக் கழக செயற்பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மின்வாரியத்தில் பணிக்காலத்தில் இறந்த பணியாளா்கள், அலுவலா்களின் 3 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், மயிலம் சட்டப்பேரவை உறுப்பினா் ச.சிவக்குமாா், திண்டிவனம் சாா்-ஆட்சியா் அமித், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக்குப்தா, மின் செயற்பொறியாளா்கள் மதனகோபால் (விழுப்புரம்), சதாசிவம் (திண்டிவனம்), சித்ரா (செஞ்சி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.