முகப்பு
விழுப்புரம்

குளத்தில் மூழ்கி முதியவா் பலி

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குளத்தில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குளத்தில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.

வானூா் அருகே ராயபுதுப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிங்காரம் (80). இவரது மகள் வீடு மரக்காணம் அருகே கூனிமேடு கிராமத்தில் உள்ளது. சிங்காரம் கூனிமேட்டில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள குளத்துக்குச் சென்ற சிங்காரம், குளத்தினுள் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற மரக்காணம் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டிகுளத்திலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோன்று, விழுப்புரம் அருகே வளவனூரை அடுத்த கொங்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பெ.சங்கா், அதே பகுதியில் உள்ள மலட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.