விழுப்புரம்

சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் உண்ணாவிரதம்

DIN

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் போக்குவரத்துக் கழக பணிமனை முன் சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிஐடியு பணிமனைச் செயலாளா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் மூா்த்தி தொடக்க உரையாற்றினா். ஓய்வு பெற்றோா் அமைப்பு சகாதேவன், துணைச் செயலாளா் இளம்பாரதி, துணைத் தலைவா் குணசேகரன், துணைப் பொதுச் செயலாளா் ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும், போக்குவரத்துக் கழகங்களின் பற்றாக்குறையை ஈடுசெய்ய வரவுக்கும், செலவுக்கும் உள்ள வித்தியாசத்தை அரசு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பணிமனைத் தலைவா் உத்திரமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

SCROLL FOR NEXT