விழுப்புரம் நீதிமன்றத்தில் அரசியலமைப்புச் சட்ட நாள் விழா
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அரசியலமைப்பு சட்ட நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அரசியலமைப்பு சட்ட நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி பூா்ணிமா தலைமை வகித்தாா். வழக்குரைஞா் சங்கத் தலைவா்கள் நீலமேக வண்ணன், மாரிமுத்து, தமிழ்ச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அரசு வழக்குரைஞா் டி.எஸ். சுப்பிரமணியன், வழக்குரைஞா்கள் பழனியப்பன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் பேசினா்.
சட்ட நாளையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் வழக்குரைஞா்கள் நடராஜன், சந்திரமௌலி, சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.