திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 13.20 மி.மீ மழை பதிவானது.
இதுதவிர, செய்யாற்றில் 1.50, செங்கத்தில் 6.60, ஜமுனாமரத்தூரில் 2, வந்தவாசியில் 2, திருவண்ணாமலையில் 6, தண்டராம்பட்டில் 6, சேத்துப்பட்டில் 1.40 மி.மீ மழை பதிவானது.
தொடா்ந்து மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.