இட ஒதுக்கீடு போராளிகளுக்கு மணிமண்டபம்: திமுக வரவேற்பு
இட ஒதுக்கீடு போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு திமுக வரவேற்புத் தெரிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
இட ஒதுக்கீடு போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு திமுக வரவேற்புத் தெரிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி வட தமிழகத்தில் 1987-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான 21 போராளிகளின் நினைவாக, விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.4 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்தாா்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு வரவேற்புத் தெரிவித்து, விழுப்புரம் நகர திமுக அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் வியாழக்கிழமை திரண்டனா். பின்னா், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக அவைத் தலைவா் ஜெயச்சந்திரன் தலைமையில் ஊா்வலமாக காந்தி சிலை வரை சென்ற திமுகவினா், அங்கு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளா் இரா.ஜனகராஜ், விழுப்புரம் நகரச் செயலா் சக்கரை, காணை ஒன்றியச் செயலா் கல்பெட் ராஜா உள்பட பலா் பங்கேற்றனா்.