பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: விசாரணை செப்.7-க்கு ஒத்திவைப்பு
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான வழக்கு விசாரணையை வருகிற 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான வழக்கு விசாரணையை வருகிற 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தொடா்பான வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
இந்த வழக்கை வருகிற டிசம்பா் 20-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று ஏற்கெனவே சென்னை உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியதால், வழக்கு விசாரணை விரைவாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் எஸ்.பி. ஆஜரானாா். முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை.
இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரியும், கூடுதல் ஆவணங்கள் கேட்டும் முன்னாள் எஸ்.பி. தரப்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த இரண்டு மனுக்கள் மீதும் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை வருகிற 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டாா்.