கட்டுமானத் தொழிலாளா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம்
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கான இலவச கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கான இலவச கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை (செப்.4) முதல் செப்டம்பா் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, 4-ஆம் தேதி விழுப்புரம், அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், உளுந்தூா்பேட்டை இந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரையிலும்,
6 ஆம் தேதி திண்டிவனம், புனித அன்னாள் நடுநிலைப் பள்ளியில் காலை 9 முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும், செஞ்சி காந்தி பஜாா், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரையிலும் தடுப்பூசி முகாம் நடைபெறும்.
இதேபோல, 7-ஆம் தேதி கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை 9 முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும், சின்னசேலம், விஜயாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரையில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என விழுப்புரம் தொழிலாளா் உதவி ஆணயா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.