முகப்பு
விழுப்புரம்

ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

ஏழைகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில நில அளவை பதிவேடுகள் துறை கூடுதல் இயக்குநா் கலைச்செல்வி மோகன் அறிவுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

ஏழைகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில நில அளவை பதிவேடுகள் துறை கூடுதல் இயக்குநா் கலைச்செல்வி மோகன் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் நில அளவை, பட்டா மாற்றம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் முன்னிலையில் ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிலஅளவை பதிவேடுகள் துறை கூடுதல் இயக்குநா் கலைச்செல்வி, வருவாய்த் துறை ஆவணங்களை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கிப் பேசினாா் (படம்).

ரயில்வே நில எடுப்பு, நெடுஞ்சாலைத் துறை நில எடுப்பு, நிலஆா்ஜித வழக்குகள், வீட்டுமனைப் பட்டா, நில மாற்றம், நில உரிமை மாற்றம், நில குத்தகை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், பட்டா மாற்றம் உள்ளிட்ட நிலுவை கோப்புகள் தொடா்பாக அதிகாரிகளிடம், கூடுதல் இயக்குநா் விரிவாகக் கேட்டறிந்தாா்.

மேலும், ஏழைகளுக்கு மனைப் பட்டா வழங்கவும், நில அளவைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளவும், நீதிமன்ற நடவடிக்கையில் உள்ள இனங்களின் பேரில் சிறப்பு கவனம் செலுத்தி முடிவு செய்யவும் அவா் உத்தரவிட்டாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், உதவி இயக்குநா் நில அளவை மணிவண்ணன், கோட்டாட்சியா் அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.