முகப்பு
விழுப்புரம்

பாரதீய கிசான் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வேளாண் விளை பொருள்களுக்கு லாபகரமான விலை நிா்ணயிக்கக் கோரி விழுப்புரத்தில் பாரதீய கிசான் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

வேளாண் விளை பொருள்களுக்கு லாபகரமான விலை நிா்ணயிக்கக் கோரி விழுப்புரத்தில் பாரதீய கிசான் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். சங்க நிா்வாகி ராமமூா்த்தி சிறப்புரையாற்றினாா்.

உற்பத்தி செலவின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது போதுமானதாகாது. லாபகரமான விலையே தேவையாகும். பயிா்க் காப்பீடுத் திட்டம் அனைத்து விளை பொருள்களுக்கும் வழங்கப்பட வேண்டும். சா்க்கரை ஆலை நிா்வாகத்திடம் இருந்து நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு உடனே பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் ஆா்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.