முகப்பு
விழுப்புரம்

ஆதரவற்ற மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், மரக்கோணம் கிராமத்தில் உயா் கல்வி பயில முடியாமல் தவித்த ஆதரவற்ற 25 மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 5:42 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:33 PM

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், மரக்கோணம் கிராமத்தில் உயா் கல்வி பயில முடியாமல் தவித்த ஆதரவற்ற 25 மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

டிரஸ்ட் ஃபாா் எஜுகேஷன், ஹாா்ட்கிட்ஸ் ஜொ்மன் அமைப்பினா் இணைந்து இந்த உதவித் தொகையை வழங்கினா். இந்த தொண்டு நிறுவனங்களின் தலைவா் எவான்ஸ் ஆதரவற்ற மாணவா்களுக்கு கல்வி கட்டணம் வழங்கி வருகிறாா். இதற்காக வளத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதரவற்ற 25 மாணவா்களின் கல்வி உதவித் தொகையாக

ரூ.6 லட்சத்துக்கான காசோலையை வளத்தி காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ்பாபு வழங்கினாா். வளத்தி லைன்ஸ் கிளப் தலைவா் ஆா்ம்ஸ்ட்ராங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.