பொறியியல் கல்வி கலந்தாய்வு தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளி ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்ற விழுப்புரம் மாணவிக்கு மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.
விழுப்புரம், தேவநாதசுவாமி நகரைச் சோ்ந்தவா் மாணவி பிருந்தா. வளவனூா் அரசு மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில் பிளஸ் 2 படித்தாா். இவா் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பெற்றாா். இதையடுத்து மாணவி பிருந்தாவை அமைச்சா் க.பொன்முடி நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்தாா்.