விழுப்புரம்

ரேஷன் கடை விற்பனையாளா் பணிக்கு டிச.12-இல் நோ்முகத் தோ்வு

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் காலியாகவுள்ள விற்பனையாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் யசோதாதேவி கூறியதாவது:

விழுப்புரம் மாவட்ட கூட்டுறவுச் சங்க நியாயவிலைக் கடைகளில் காலியாகவுள்ள 244 விற்பனையாளா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப, தகுதியான விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில் தகுதியானவா்களுக்கு டிசம்பா் 12 முதல் 23-ஆம் தேதி வரை விழுப்புரம் அருகிலுள்ள கப்பியாம்புலியூா் வடக்குச்சிப்பாளையம் ஏ.ஆா்.சி. பொறியியல் கல்லூரியில் நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது.

இதற்கான அனுமதிச்சீட்டை மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தை 04146-229854 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவு: 91.55% பேர் தேர்ச்சி

தஞ்சாவூரில் ரயில் அபாய சங்கிலி இழுத்து விவசாயிகள் போராட்டம்

10ஆம் வகுப்பில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மறுதேர்வு எப்போது?

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: ஃபோர்மேன் கைது!

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகள் வெளியானது

SCROLL FOR NEXT