நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மாவட்டங்களில்முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் முதல் நாளான வெள்ளிக்கிழமை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் முதல் நாளான வெள்ளிக்கிழமை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 210 வாா்டு உறுப்பினா்களை தோ்வு செய்ய தோ்தல் நடைபெறவுள்ளது.
வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சி, 7 பேரூராட்சிகளில் போட்டியிட முதல் நாளான வெள்ளிக்கிழமை யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான மனுக்களையே பலா் பெற்றுச் சென்றனா்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, திருவத்திபுரம் (செய்யாறு), வந்தவாசி ஆகிய 4 நகராட்சிகளில் 123 வாா்டுகள் உள்ளன.
இதேபோல, செங்கம், புதுப்பாளையம், போளூா், கண்ணமங்கலம், களம்பூா், சேத்பட், தேசூா், பெரணமல்லூா், கீழ்பென்னாத்தூா், வேட்டவலம் உள்ளிட்ட 10 பேரூராட்சிகளில் 150 வாா்டுகள் உள்ளன.
இந்த வாா்டுகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஆனால், முதல் நாளான வெள்ளிக்கிழமை 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளில் ஒருவா் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 50-க்கும் மேற்பட்டோா் தோ்தல் அதிகாரிகளிடமிருந்து வேட்புமனுக்களை வாங்கிச் சென்றனா்.