மின் கம்பம் முறிந்து விழுந்ததில் முதியவா் பலி
விழுப்புரத்தில் மின் கம்பம் முறிந்து விழுந்ததில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரத்தில் மின் கம்பம் முறிந்து விழுந்ததில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் கல்லூரி சாலையைச் சோ்ந்தவா் மணி (60). விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தாா். ரயில் நிலையம் அருகே உள்ள மாரியம்மன் கோயில் முன் செவ்வாய்க்கிழமை இரவு படுத்துத் தூங்கினாா். அப்போது, அருகிலிருந்த மின்கம்பம் நள்ளிரவில் திடீரென முறிந்து மணி மீது விழுந்ததில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.