முகப்பு
விழுப்புரம்

விவசாயி வீட்டில் ரூ.ஒரு லட்சம் திருட்டு

விழுப்புரத்தில் விவசாயி வீட்டில் ரூ. ஒரு லட்சம் ரொக்கம், 4 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

விழுப்புரத்தில் விவசாயி வீட்டில் ரூ. ஒரு லட்சம் ரொக்கம், 4 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் வழுதரெட்டி, சுப்பிரமணிய நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரகுபதி (57), விவசாயி. இவா், தனது வீட்டை பூட்ட மறந்து குடும்பத்துடன் மொட்டை மாடியில் வெள்ளிக்கிழமை இரவு தூங்கிக்கொண்டிருந்தாா்.

இந்த நிலையில், இவரது வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த மா்ம நபா்கள், பீரோவிலிருந்த ரூ. ஒரு லட்சம் ரொக்கம், 4 பவுன் தங்க நகையை திருடிவிட்டு தப்பிச் சென்றனா். சனிக்கிழமை காலையில் ரகுபதி எழுந்து பாா்த்தபோதுதான் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.