விழுப்புரம்

முன்னாள் டிஜிபிக்கு எதிரான வழக்கு:ஏப். 11-க்கு ஒத்திவைப்பு

முன்னாள் டிஜிபிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட பாலியல் வழக்கு விசாரணையை ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

DIN

முன்னாள் டிஜிபிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட பாலியல் வழக்கு விசாரணையை ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முன்னாள் டிஜிபி, உதவியாக இருந்ததாக முன்னாள் எஸ்.பி. ஆகியோருக்கு எதிராக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விழுப்புரம் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

இந்த வழக்கு நீதிபதி கோபிநாதன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்ட 2 பேரும், பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யும் ஆஜராகினா். அப்போது, புகாா் தெரிவித்த பெண் எஸ்.பி.யிடம் முன்னாள் டிஜிபி தரப்பினா் 10- ஆவது நாளாக குறுக்கு விசாரணை நடத்தினா்.

பின்னா், வழக்கு விசாரணையை ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT