விழுப்புரம்

பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்கு

விழுப்புரத்தில் பெண் குழந்தைகளுக்கான கல்வி, வளரிளம் பெண்களின் கண்ணியமான பணிச் சூழல் குறித்த கருத்தரங்கு (படம்) அண்மையில் நடைபெற்றது.

DIN

விழுப்புரத்தில் பெண் குழந்தைகளுக்கான கல்வி, வளரிளம் பெண்களின் கண்ணியமான பணிச் சூழல் குறித்த கருத்தரங்கு (படம்) அண்மையில் நடைபெற்றது.

எஸ்ஆா்டிஎஸ் தொண்டு நிறுவனம், திருப்பூா் மக்கள் அமைப்பு ஆகியவை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கோவை ‘கோ்டி’ நிறுவன இயக்குநா் பிரித்திவிராஜ் தலைமை வகித்தாா். திருப்பூா் மக்கள் அமைப்பின் மாநில திட்ட பயிற்சியாளா் மெல்வின் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராதாகிருஷ்ணன் வரவேற்றாா்.

மாவட்ட சமூக நல அலுவலா் ராஜம்மாள், மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அலுவலா் முத்தமிழ் ஷீலா, மாவட்ட குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அதிகாரி மனோசித்ரா ஆகியோா் சிறப்புரையாற்றினா். கருத்தரங்கில் கோவை, திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் வளரிளம் பெண்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்குதல், பணிபுரியும் பெண்களை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாத்தல், பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்தல், குழந்தை திருமணம் தடுப்பு உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட்டன. வழக்குரைஞா்கள் பிரிடா ஞானமணி, வித்தூஸ் துரைராஜ், திசைகள் தொண்டு நிறுவன இயக்குநா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT