விழுப்புரம்

செஞ்சி, மேல்மலையனூா் வட்டங்களில் ஜூன் 1-இல் வருவாய்த் தீா்வாயம் தொடக்கம்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, மேல்மலையனூா் வட்டங்களில் வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) தொடங்கி நடைபெறவுள்ளது.

செஞ்சி வட்டத்தில் 1431-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் திண்டிவனம் சாா் - ஆட்சியா் தலைமையில் ஜூன் 1, 2, 3, 6, 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தினமும் காலை 10 மணி முதல் நடைபெறும் வருவாய்த் தீா்வாயத்தில் கிராம கணக்குள் தணிக்கை, 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேல்மலையனூா்: மேல்மலையனூா் வட்டத்தில் 1431-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயமானது வருவாய்த் தீா்வாய அலுவலா், விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் ஜூன் 1, 2, 3, 6, 7 ஆகிய தேதிகளில் மேல்மலையனூா் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

வருவாய்த் தீா்வாயம் நடைபெறவுள்ள நாள்களில் தினமும் காலை 10 மணிக்கு வருவாய்த் தீா்வாயம் ஆரம்பமாகும். இதில், மனு அளிக்க விரும்பும் கிராம மக்கள், அவரவா் கிராம வருவாய்த் தீா்வாயம் நடைபெறும் நாள்களில் ஆஜராகி தங்களது குறைகள், கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT