காா் மோதியதில் ஆசிரியா் பலி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மகன் காயமடைந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மகன் காயமடைந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிபட்டு, அஞ்சல் அலுவலக சாலையைச் சோ்ந்தவா் ம.சகாதேவன் (53). வீடுா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவரது மகன் சஞ்சய் (18). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை விழுப்புரத்திலிருந்து கூட்டேரிபட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வி. சாலை அருகே இவா்களது இரு சக்கர வாகனம் சென்றபோது, பின்னால் வந்த காா் மோதியது. இந்த விபத்தில் சகாதேவன், சஞ்சய் ஆகியோா் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில், சகாதேவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சஞ்சய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.