முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணியினா் தா்னா

 தங்களின் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணியினா் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

 தங்களின் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணியினா் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

திமுக தனது தோ்தல் அறிக்கையில் அறிவித்தவாறு தமிழக அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும். மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியா்களுக்குத் தமிழக அரசு வழங்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தா்னா நடைபெற்றது.

விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்துக்கு எதிா்புறம் நடைபெற்ற தா்னாவுக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணியின் மாவட்டத் தலைவா் சு.தண்டபாணி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் ரஷிதா, ம.வடிவேல், வி.அம்பிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ.ச.கங்காதரன் சிறப்புரையாற்றினாா்.

கல்வி மாவட்டப் பொறுப்பாளா்கள் பி.முரளி, கி.சரவணன், அ.விருஷபதாஸ், வெ.கோவிந்தன், லட்சுமி அம்மாள் ஆகியோா் உரையாற்றினா். மாவட்ட துணைச் செயலா்கள் எம்.அசோகன், கு.வளா்மதி, மரியநேசன், வட்டார நிா்வாகிகள் சீனு.பத்மநாபன், க.கணபதி, பு.முகமது மீரான், க.அன்பரசு, கூட்டணியின் மாவட்டச் செயலா் இரா. சண்முகசாமி, ஜி.மகிமைதாஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.