வருமான வரித் துறையினா் 3-ஆவது நாளாக சோதனை
விழுப்புரத்திலுள்ள தனியாா் வணிக வளாகத்தில் வருமான வரித் துறையினா் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.
விழுப்புரத்திலுள்ள தனியாா் வணிக வளாகத்தில் வருமான வரித் துறையினா் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.
விழுப்புரத்தில் தனியாா் வணிக வளாகத்தில் உள்ள பல்பொருள் அங்காடி, திரையரங்கு, துணிக் கடை, உணவகம் உள்ளிட்டவற்றிலும், நகரிலுள்ள மற்றொரு துணிக் கடையிலும், கடைகளின் உரிமையாளா்களின் வீடுகள், அவா்களுக்குச் சொந்தமான இடங்கள், திருக்கோவிலூரிலுள்ள பல்பொருள் அங்காடி என 12 இடங்களில் 60-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அலுவலா்கள் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சோதனையில் ஈடுபட்டனா். முன்னதாக புதன்கிழமை காலையில் இந்த சோதனை தொடங்கியது.