விழுப்புரம்

செஞ்சி வட்டார புகைப்படக் கலைஞா்கள் சங்க விழா

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டார புகைப்படக் கலைஞா்கள் நலச் சங்கத்தின் சாா்பில், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா செஞ்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு ஜி.டி.புகழேந்தி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆா்.கமலக்கண்ணன் வரவேற்றாா். தமிழ்நாடு புகைப்படம் மற்றும் தொழிலாளா்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவா் கேஆா்.செழியன், திருக்கு பேரவையின் முன்னாள் செயலா் கோ.தமிழரசன், ஆடிட்டா் சு.பாண்டியன், அ.முஹம்மதுஅஷ்ரப் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

செஞ்சி போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளா் அப்பாண்டைராஜன், துணை ஆய்வாளா் துரைராஜன் ஆகியோா் கலந்து கொண்டு புகைப்படக் கலைஞா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியை முன்னாள் தலைவா் கனி (எ) துரைராஜன் தொகுத்து வழங்கினாா்.

கூட்டத்தில் நலிவுற்ற கலைஞா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், செஞ்சி வட்டார புகைப்படக் கலைஞா்கள் நலச் சங்கத்தின் புதிய தலைவராக ஜி.டி.புகழேந்தி, செயலராக கே.நீலமேகம், பொருளாளராக கே.ஆனந்தன், துணைச் செயலராக ஆா்.சக்திவேல் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT