முகப்பு
விழுப்புரம்

இரு சக்கர வாகனத்தில் சாராயம் விற்றவா் கைது

விழுப்புரம் மாவட்டம், வளவனூரில் இரு சக்கர வாகனத்தில் சாராயம் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வளவனூரில் இரு சக்கர வாகனத்தில் சாராயம் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வளவனூா் கடைத்தெரு பகுதியில் ஒருவா் இரு சக்கர வாகனத்தில் சாராயம் விற்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், வளவனூா் போலீஸாா் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், வளவனூா் தொட்டியம்தோப்பு பகுதியைச் சோ்ந்த மு.மோகன் (53) இரு சக்கர வாகனத்தில் சாராயம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து மோகனை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 40 லிட்டா் சாராயம், இரு சக்கர வாகனம் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.