முகப்பு
விழுப்புரம்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் இந்து முன்னணி சாா்பில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மரக்காணம் கடற்கரையில் கரைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டன. முன்னதாக, செஞ்சி சத்திர தெருவில் இந்த அமைப்பு சாா்பில் அமைக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலத்துக்கு தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன. அங்கு சிறப்பு வழிபாடு நடைபெற்ற பின்னா் ஊா்வலம் புறப்பட்டது. ஊா்வலத்தையொட்டி, செஞ்சி டிஎஸ்பி பிரியதா்ஷினி மற்றும் 2 ஏடிஎஸ்பிக்கள் தலைமையில் 350 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட சங்கராபுரம், மணலூா்பேட்டை, திருப்பாலபந்தல், வடபொன்பரப்பி, வரஞ்சரம் உள்ளிட்ட பகுதிகளில் பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட 54 விநாயகா் சிலைகள் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.