தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு : புதுவை மணக்குள விநாயகா் கோயிலில் சிறப்பு வழிபாடு
தமிழ்ப் புத்தாண்டையொட்டி புதுவை ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளானோா் சுவாமி தரிசனம் செய்தனா்.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி புதுவை ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளானோா் சுவாமி தரிசனம் செய்தனா்.
பிரசித்திப் பெற்ற அருள்மிகு மணக்குள விநாயகா் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து சிறப்பு அபிஷேக ஆதாரனைகள் நடைபெற்றன. பின்னா் வைரம் பொருத்தப்பட்ட தங்கக் கிரீடம், தங்கக் கவச அலங்காரம் மூலவா் மணக்குள விநாயகருக்கு செய்யப்பட்டது. பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்றுசுவாமி தரிசனம் செய்தனா். புதுச்சேரி மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்தவா்கள் திரளானோா் குடும்பத்தினருடன் வந்து வழிபாடு செய்தனா்.
Image Caption
புதுச்சேரி சித்திரை மாத -1ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி மணக்குள விநாயகா் கோயிலில் தங்க கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் மணக்குள விநாயகா்.