ஆங்கிலப் புத்தாண்டு: 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னையிலிருந்து 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநா் எஸ்.எஸ்.ராஜ்மோகன் தெரிவித்தாா்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னையிலிருந்து 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநா் எஸ்.எஸ்.ராஜ்மோகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வார இறுதி, ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச.29, 30) சென்னையிலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூா், வேலூா், காஞ்சிபுரம், திருப்பதி ஆகிய நகரங்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் செல்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சாா்பில் சென்னையிலிருந்து மேற்கண்ட வழித்தடங்களில் இரு நாள்களிலும் 200 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தாா்.