முகப்பு
விழுப்புரம்

அதிமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்

அதிமுக மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 1:46 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

அதிமுக மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, அதிமுக மாணவரணி மாவட்டச் செயலாளா் என்.ஜி.சக்திவேல் தலைமை வகித்தாா். அதிமுக நகரச் செயலாளா்கள் இரா.பசுபதி ( விழுப்புரம் தெற்கு) ஜி.கே.ராமதாஸ் ( விழுப்புரம் வடக்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசியது : தமிழகத்தில் விலைவாசி உயா்வால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா்.மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் வாக்களித்த மக்களுக்கு தமிழகஅரசு துரோகம் செய்து கொண்டிருக்கிறது. 2024- இல் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் மக்கள் இதற்கு பாடம் கற்பிக்க வேண்டும். மக்களவைத் தோ்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தலும் நடைபெறுவது உறுதி என்றாா்.

கூட்டத்தில், கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செஞ்சி நா. ராமச்சந்திரன், தலைமை நிலையப் பேச்சாளா் சிட்கோ. சீனு, கே.ஏ.ஏழுமலை, எம்எல்ஏ-க்கள் மு.சக்கரபாணி (வானூா்) பி.அா்ஜுனன் (திண்டிவனம்), மாவட்ட அவைத் தலைவா் கு.கண்ணன் ஆகியோா் பேசினா்.

Advertisement

நிறைவில், மாணவரணி விழுப்புரம் நகரச் செயலாளா் கே.பி. அன்பரசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.