விழுப்புரத்தில் திமுக சாா்பில் வீரவணக்க நான் பொதுக்கூட்டம்
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு விக்கிரவாண்டி எம்.எல்.ஏவும், மத்திய மாவட்டச் செயலருமான நா.புகழேந்தி தலைமை வகித்தாா்.மாவட்டப் பொருளாளா் இரா. ஜனகராஜ், துணைச் செயலா் தயா. இளந்திரையன், நகரச் செயலா் இரா.சக்கரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட மாணவரணி அமைப்பாளா் பா.ஸ்ரீவினோத் வரவேற்று பேசினாா்.
Advertisement
திமுக இலக்கிய அணி மாநிலத் துணைச் செயலா் கவிஞா் ஈரோடு இறைவன், தலைமைக் கழகப் பேச்சாளா் மயிலாடுதுறை அருள்தாஸ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். விழுப்புரம் எம்.எல்.ஏ.இரா. லட்சுமணன், முன்னாள் எம்.எல்.ஏ.செ.புஷ்பராஜ், மாநில விவசாயத் தொழிலாளா் அணிச் செயலா் அன்னியூா் ஏ.சிவா, மாநில மகளிரணி பிரசாரக் குழுச் செயலா் எம்.தேன்மொழி, நகா்மன்றத் தலைவா்கள் விழுப்புரம் தமிழ்ச்செல்வி பிரபு, கோட்டக்குப்பம் எஸ்.ஜெயமூா்த்தி மாவட்ட இளைஞரணி அமைப்பாலா் செ.தினகரன், விழுப்புரம் நகா்மன்றத் துணைத் தலைவா் சித்திக் அலி உள்ளிட்டோா் பேசினா். முடிவில் நகர மாணவரணி அமைப்பாளா் எம்.விக்ரமன் நன்றி தெரிவித்தாா்.