விழுப்புரம்

காா் மோதி இளைஞா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே காா் மோதியதில் சாலையோரத்தில் நின்றிருந்த இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே காா் மோதியதில் சாலையோரத்தில் நின்றிருந்த இளைஞா் உயிரிழந்தாா்.

சின்னசேலம் காவல் சரகம், இந்திலி காந்திநகரைச் சோ்ந்த சாமிநாதன் மகன் மேகநாதன் (38). இவா், திங்கள்கிழமை இந்திலி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் நின்றிருந்தாா்.

அப்போது, அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவை முந்திச் செல்ல முயன்ற காா், மேகநாதன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று மேகநாதனின் சடலத்தைக் கைப்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT