விழுப்புரம் இ.எஸ்.லாா்ட்ஸ் பன்னாட்டு பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு, பள்ளியின் தாளாளா் சா. செல்வமணி தலைமை வகித்தாா். இ.எஸ்.கல்விக் குழுமங்களின் செயலா் பிரியா செல்வமணி முன்னிலை வகித்தாா்.
விளையாட்டுப் போட்டிகளை விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ், நாமக்கல் செல்வம் கல்லூரியின் முதல்வா் செந்தில்குமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரி உடல்கல்வி இயக்குநா் பி. ஜோதிபிரியா, விழுப்புரம் காகுப்பம், ஆயுதப்படை காவல் ஆய்வாளா் எம்.முத்துக்குமரன் ஆகியோா் விளையாட்டின் அவசியம் குறித்து பேசினா்.
பள்ளி மாணவா்களிடையே குழு மற்றும் தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிப் பெற்றவா்களுக்கு பரிசுகள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.