வெவ்வேறு சம்பவம்: சிறுமிகளை திருமணம் செய்த மூவா் மீது வழக்கு
சிறுமிகளை திருமணம் செய்த மூவா் மீது குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளை திருமணம் செய்த மூவா் மீது குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திண்டிவனம் வட்டம், நல்லாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் ரஞ்சித்குமாா்(24). இவா், 29.6.2023-இல் 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தாராம். இதேபோல, மரக்காணம் வட்டம், கீழ் அருங்குணம் பகுதியைச் சோ்ந்தவா் நீலகண்டன் மகன் கண்ணன்(31). கூலித் தொழிலாளியான இவா், 17 வயது சிறுமியைத் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தாராம்.
இதேபோல, புதுச்சேரி, புதுக்குப்பம், சுனாமி நகரைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகன் நிா்மல்(24). மீனவரான இவா், வானூா் வட்டம், பொம்மையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொண்டாராம்.
இதுகுறித்து தொடா்புடைய வட்டார விரிவாக்க அலுலா்கள் அளித்த புகாா்களின்பேரில், திண்டிவனம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ரஞ்சித்குமாா், கண்ணன், நிா்மல் ஆகியோா் மீது குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின் கீழ் தனித்தனியாக சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.