விழுப்புரம்

வீட்டில் நகை திருட்டு

திண்டிவனம் அருகே வீட்டில் 3.5 பவுன் நகைகள், வெள்ளிக் கொலுசுகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Din

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீட்டில் 3.5 பவுன் நகைகள், வெள்ளிக் கொலுசுகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திண்டிவனம் வட்டம், வடகளவாய், காட்டுப்பூஞ்சை, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாபு. இவரது மனைவி மாரியம்மாள் (32). இவா்கள் கடந்த ஆக.8-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றனா்.

பின்னா், வேலை முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 2 பவுன் தங்க வளையல்கள், அரை பவுன் தங்கச் சங்கிலி, ஒரு பவுன் தோடு, ஜிமிக்கி, 250 கிராம் எடையுள்ள ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஒலக்கூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி வரூடாந்திர பிரம்மோற்சவம்: பிப்.8-இல் தொடக்கம்

ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மத்திய அரசு விருது

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT