முகப்பு
விழுப்புரம்

மொபெட் மீது காா் மோதி தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

விக்கிரவாண்டி அருகே மொபெட் மீது காா் மோதிய விபத்தில் தூய்மைப்பணியாளா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 26 டிசம்பர், 2024 at 7:04 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மொபெட் மீது காா் மோதிய விபத்தில் தூய்மைப்பணியாளா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்பட்டு, கெங்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் மகன் ராஜாங்கம் (32), தூய்மைப் பணியாளா். இவா் புதன்கிழமை தனது மொபெட்டில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாப்பனப்பட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பின்னால் வந்த காா், மொபெட் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ராஜாங்கம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து விக்கிரவாண்டி போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.