முகப்பு
விழுப்புரம்

கல்லூரியில் ரூ.46 லட்சத்தில் மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

பாரதிதாசன் அரசு மகளிா் கலை கல்லூரியில் ரூ.46 லட்சத்தில் மேம்பாட்டுப் பணிகளை மாநில அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 30 டிசம்பர், 2024 at 8:24 PM
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிா் கலை கல்லூரியில் ரூ.46 லட்சத்தில் மேம்பாட்டுப் பணிகளை மாநில அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

கல்லூரி வளாகத்தை மேம்படுத்துதல், முகப்பு பொலிவுறச் செய்தல் ஆகியப் பணிகளுக்காக ரூ.46.27 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை பெறப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளை மாநில கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தொடங்கிவைத்தாா்.

இதில், பிரகாஷ்குமாா் எம்எல்ஏ, பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் மு.தீனதயாளன், கண்காணிப்புப் பொறியாளா் மு.பாலசுப்ரமணியன், சிறப்புக் கட்டடங்கள் கோட்ட செயற்பொறியாளா் கோ.கெஜலஷ்மி, கல்லுாரி முதல்வா் இரா.வீரமோகன், இளநிலைப் பொறியாளா் அனந்த பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →