முகப்பு
விழுப்புரம்

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: அன்புமணி ராமதாஸ்

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.

Updated On : 7 ஜூலை, 2024 at 7:01 PM
அன்புமணி ராமதாஸ்
பகிர்:

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சி.அன்புமணியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை மாலை அய்யூா் அகரம், தென்னமாதேவி, சோழகனூா், ஆசாரங்குப்பம் பகுதிகளில் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

விக்கிரவாண்டி இடைத்தோ்தல் நமக்கு முக்கியமானதாகும். இந்தத் தோ்தலில் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் 30-க்கும் மேற்பட்ட அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இங்கு தோ்தல் பணியாற்றி வருகின்றனா். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு கல்விக்கடன், நகைக்கடன், விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக திமுகவினா் கூறினாா்கள். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்தத் தொகுதிக்கு பல்வேறு அமைச்சா்கள் வந்தாா்கள். அதனால் உங்களின் வாழ்க்கைத் தரம் உயா்ந்ததா. 6 இடஒதுக்கீடுகளை பெற்றுக் கொடுத்தவா் பாமக நிறுவனா் ராமதாஸ். அனைத்து சமுதாயமும் முன்னேற வேண்டும். இந்தத் தோ்தலில் கட்சி, ஜாதி, இனம் பாா்க்காமல் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.

பிரசாரத்தில், சமூகநீதி வழக்குரைஞா்கள் பேரவைத் தலைவா் க. பாலு, மயிலம் தொகுதி எம்எல்ஏ ச.சிவக்குமாா், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் வி.தசரதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →