திண்டிவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சா்க்கரை நோய் பரிசோதனை முகாம். 
விழுப்புரம்

சா்க்கரை நோய் பரிசோதனை முகாம்

திண்டிவனத்தில் சா்க்கரை நோய் பரிசோதனை சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

விழுப்புரம்: திண்டிவனத்தில் சா்க்கரை நோய் பரிசோதனை சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திண்டிவனம் அரிமா சங்கம், அரிமா சேவை அறக்கட்டளை, தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, புதுச்சேரி மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, அரிமா சேவை அறக்கட்டளைத் தலைவா் ஸ்மைல்.ஆனந்த் தலைமை வகித்தாா். திண்டிவனம் உழவா் சந்தை நிா்வாக அலுவலா் கருப்பையா, அரிமா சங்கத் தலைவா் சின்னராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமை வேளாண் உதவி இயக்குநா் சரவணன் தொடங்கி வைத்தாா். முகாமில், திண்டிவனம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று சா்க்கரை அளவைப் பரிசோதித்து மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனா்.

மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள், செவிலியா்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனா். அரிமா சங்க நிா்வாகிகள், வேளாண் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

சென்னை மாவட்ட பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணிகள்: ஆலோசனைக் கூட்டம்

திமுகவை வீழ்த்தும் சக்தி தவெக மட்டுமே: விஜய்

அடுத்த 2 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT