விழுப்புரம்

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: இன்று விசாரணை

அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

Din

விழுப்புரம்: உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஜூலை 16) ஒத்தி வைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடா்பாக, உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 8 போ் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவா்களில் ஒருவரான லோகநாதன் இறந்துவிட்டாா்.

இந்த வழக்கில், அரசுத் தரப்பு சாட்சிகளாக சோ்க்கப்பட்டிருந்த 67 பேரில், 35 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், 28 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாக பி சாட்சியமளித்துள்ளனா். இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விசாரணையின் போது, கோபிநாத், ஜெயச்சந்திரன், சதானந்தன், கோதகுமாா், ராஜமகேந்திரன் ஆகிய 5 போ் ஆஜரான நிலையில், அமைச்சா் க.பொன்முடி, முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அரசுத் தரப்பில் சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஜூலை 16) ஒத்திவைத்து, முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா உத்தரவிட்டாா்.

முதல்முறையாக வெளிநாடு சென்றார் போப் 14-ம் லியோ!

வயிறு உப்புசமாக இருக்கிறதா? சரிசெய்யும் வழிகள் இதோ...

இனிய மாலைவேளை... மாளவிகா மோகனன்!

ஜனவரியில் தொடங்கும் மகளிர் பிரீமியர் லீக்!

சபரிமலை அன்னதான உணவில் அதிரடி மாற்றம்! புதிய மெனு என்ன?

SCROLL FOR NEXT