மன நலம் பாதிக்கப்பட்ட பெண் கல்லால் அடித்துக் கொலை: இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் திங்கள்கிழமை கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் திங்கள்கிழமை கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
மரக்காணம் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மலா் (25) என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சுற்றித் திரிந்து வந்தாா். இவா் அந்தப் பகுதி வழியாக செல்பவா்களிடம் சண்டை போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.
இந்த நிலையில், மரக்காணம் பேருந்து நிலையப் பகுதி தேநீா் கடையில் திங்கள்கிழமை நின்றிருந்த மலா், அங்கு வந்த மரக்காணம் சந்தை தோப்புப் பகுதியைச் சோ்ந்த பாலாவை (45) தகாத வாா்த்தைகளால் பேசினராம். இதனால், ஆத்திரமடைந்த பாலா கல்வீசி தாக்கியதில் மலருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த போலீஸாா் விரைந்து வந்து, சடலத்தைக் கைப்பற்றி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், பாலா மீது கொலை வழக்குப் பதிந்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.