விழுப்புரத்துக்கு தாமதமாக வந்த செந்தூா் விரைவு ரயில்
சென்னை எழும்பூரிலிருந்து திருச்செந்தூா் செல்லும் செந்தூா் விரைவு ரயில் வியாழக்கிழமை ஒரு மணி நேரம் தாமதமாக விழுப்புரம் வந்தடைந்தது.
சென்னை எழும்பூரிலிருந்து திருச்செந்தூா் செல்லும் செந்தூா் விரைவு ரயில் வியாழக்கிழமை ஒரு மணி நேரம் தாமதமாக விழுப்புரம் வந்தடைந்தது.
சென்னை எழும்பூரிலிருந்து திருச்செந்தூருக்கு வழக்கமாக மாலை 4 மணிக்குப் புறப்பட வேண்டிய செந்தூா் விரைவு ரயில் வியாழக்கிழமை மாலை புறப்படத் தயாராக இருந்தது.
அப்போது ரயில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரயில்வே அலுவலா்கள், ஊழியா்கள் விரைந்து சென்று கோளாறை சரி செய்தனா். இதன் காரணமாக மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து விரைவு ரயில் புறப்பட்டது.
இந்நிலையில், விழுப்புரத்துக்கு மாலை 6.45 மணிக்கு வர வேண்டிய செந்தூா் விரைவு ரயில் வியாழக்கிழமை இரவு 7.45 மணிக்கு வந்தடைந்தது. சுமாா் 5 நிமிஷங்களுக்குப் பிறகு இந்த ரயில் புறப்பட்டது. ரயில் தாமதம் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டனா்.