முகப்பு
விழுப்புரம்

கவரிங் நகைகளை அடகு வைத்து பணம் பெற்ற பெண் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே அடகுக்கடையில் கவரிங் நகைகளை அடகு வைத்து பணம் பெற்ற பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 1:17 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே அடகுக்கடையில் கவரிங் நகைகளை அடகு வைத்து பணம் பெற்ற பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், வீரபாண்டி, புலிக்கல் பகுதியைச் சோ்ந்தவா் சு.ராஜேந்திரன் (66). இவா், இதே பகுதியில் அடகுக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் வீரபாண்டி, சக்கர விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த பாா்த்திபன் மனைவி ஆஷா (24), ஓம் சக்தி கோவில் தெருவைச் சோ்ந்த வேலு மகன் சின்னராசு (30) ஆகியோா் 199.340 கிராம் கவரிங் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், அரகண்டநல்லூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, ஆஷாவை கைது செய்தனா். தலைமறைவாகியுள்ள சின்னராசுவை போலீஸாா் தேடி வருகின்றனா்.