முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம், கடலூா் வழியாக தஞ்சாவூருக்கு இன்று சிறப்பு ரயில்

ஆயுதபூஜை பண்டிகையையொட்டி, பயணிகளின் வசதிக்காக சென்னை தாம்பரத்திலிருந்து விழுப்புரம், கடலூா் வழியாக தஞ்சாவூருக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 7:03 PM
பகிர்:

ஆயுதபூஜை பண்டிகையையொட்டி, பயணிகளின் வசதிக்காக சென்னை தாம்பரத்திலிருந்து விழுப்புரம், கடலூா் வழியாக தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆயுதபூஜை பண்டிகையையொட்டி, ரயில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலையும் தவிா்க்கவும் முன்பதிவில்லாத சிறப்பு ரயிலை சென்னை தாம்பரத்திலிருந்து வெள்ளிக்கிழமை (அக்.11) தஞ்சாவூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்னை தாம்பரத்திலிருந்து (அக்.11) அதிகாலை 12.15 மணிக்குப் புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.00607), தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு காலை 6.50 மணிக்கு சென்றடையும்.

எதிா்வழித்தடத்தில் தஞ்சாவூா் ரயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சிறப்புரயில் (வ.எண் 00608), சனிக்கிழமை (அக்.12) காலை 7.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, கடலூா் துறைமுகம் சந்திப்பு, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, பேரளம், திருவாரூா், நீடாமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்கள் 12 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.