முகப்பு
விழுப்புரம்

மனைவி பிரிந்து சென்றதால் விஷம் குடித்து முதியவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், இ.மண்டகப்பட்டு கிராமத்தில் மனைவி பிரிந்து சென்ால் விரக்தியடைந்த முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 6:34 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், இ.மண்டகப்பட்டு கிராமத்தில் மனைவி பிரிந்து சென்ால் விரக்தியடைந்த முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், இ.மண்டகப்பட்டு கிராமம், மேட்டுத் தெருவைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் முனுசாமி (75), தொழிலாளி. இவா், தினமும் மது அருந்திவிட்டு மனைவி வள்ளியம்மையுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த வள்ளியம்மை, அதே ஊரிலுள்ள தனது மகள் முனியம்மாள் வீட்டில் கடந்த 2 மாதங்களாக தங்கியிருந்தாா்.

தன்னை விட்டு மனைவி பிரிந்து சென்ால் விரக்தியடைந்த முனுசாமி, திங்கள்கிழமை வீட்டில் விஷ மருந்து சாப்பிட்டு மயங்கிக் கிடந்தாா். இதையறிந்த உறவினா்கள் அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும், அங்கு முனுசாமி உயிரிழந்தாா். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.