முகப்பு
விழுப்புரம்

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சொத்து பிரச்னையில் மனமுடைந்த முதியவா் விஷமருந்தி தற்கொலை

Updated On : 17 மார்ச், 2026 at 11:22 PM
தற்கொலை
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சொத்து பிரச்னையில் மனமுடைந்த முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், ஈச்சங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மு.பரமசிவம்(85), விவசாயி. இவரது உறவினா் சக்திவேல். இவா்களிடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த பிப். 23-ஆம் தேதி சக்திவேல் வீட்டு மனையை அளவீடு செய்யவேண்டும் எனக் கூறி தகராறு செய்தாராம். இதனால் மனமுடைந்த பரமசிவம் வயலுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாா்.

இதையடுத்து, அவரை உறவினா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரமசிவம் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

முழு கட்டுரையைப் படிக்க →