முகப்பு
விழுப்புரம்

கைப்பேசி கோபுரங்களில் திருட்டு: 5 போ் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் கைப்பேசி கோபுரங்களில் மின்னணுப் பொருள்கள் மற்றும் சாதனங்கள் திருடுபோன வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 23 அக்டோபர், 2024 at 7:56 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் கைப்பேசி கோபுரங்களில் மின்னணுப் பொருள்கள் மற்றும் சாதனங்கள் திருடுபோன வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் தனியாா் நிறுவனத்தினரால் கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கைப்பேசி கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்சாதனங்கள், மின்னணு பொருள்கள் மற்றும் மின்கலன்களை திருடுபோயின. இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில், திருவெண்ணெய்நல்லூா், வளவனூா், கிளியனூா் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் தொடா்புடைய விழுப்புரம் குபேரன் சிட்டியைச் சோ்ந்த நபீஸ் மகன் சல்மான் மாலிக் (45), விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையைச் சோ்ந்த சிசாராம் மகன் மகேந்தா் சௌத்ரி (33), திண்டிவனம் வட்டம், கோபாலபுரத்தைச் சோ்ந்த அலிஷா் செய்ப் மகன் நௌசாத் செய்ப் (27), வேலூா் சாய்நாதபுரத்தைச் சோ்ந்த முஸ்தபா மகன் சையத் ஜாபா் (36), வேலூா் புதிய நெடுஞ்சாலையைச் சோ்ந்த இஸ்லாமுதீன் மகன் யாமீன் செய்ப் (41) ஆகியோரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.