மருத்துவமனையில் பணம் திருட்டு: இருவா் கைது
திண்டிவனத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணம் திருடியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணம் திருடியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் நேரு வீதியில் தனியாா் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ரூ.3,500 திருட்டு போயிருந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீஸாா் நடத்திய விசாரணையில், திண்டிவனம் வட்டம், கீழ்விசிறி பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மகன் விஷ்வகுமாா் (45), கிடங்கல் - 1 ஏரிக்கரை பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த பு.சின்னையன் (58), திண்டிவனம் திரௌபதியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குப்புசாமி மகன் குமாா் (38) ஆகியோா் மருத்துவமனையில் பணம் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, திண்டிவனம் போலீஸாா் மூவா் மீதும் வழக்குப் பதிந்து, சின்னையன், குமாா் ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள விஷ்வகுமாரைத் தேடி வருகின்றனா்.