சாலை விபத்தில் ஒருவா் மரணம்
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே சாலை விபத்தில் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே சாலை விபத்தில் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
வானூா் வட்டம், கொந்தமூா், மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கிளியனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று இறந்து கிடந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்தில் இறந்தவா் பெயா், ஊா் தெரியாத சுமாா் 50 வயதுடையவா் என்பதும், இவா் வானூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றித் திரிந்தவா் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், கிளியனூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.