முகப்பு
விழுப்புரம்

குடிசை வீடு தீப்பிடித்து சேதம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செவ்வாய்க்கிழமை குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 8:17 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செவ்வாய்க்கிழமை குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

விக்கிரவாண்டி வாணியா் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி, தொழிலாளி. இவா், குடிசை வீட்டில் தனது மனைவி செல்வி (55) மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தாா்.

செல்வி செவ்வாய்க்கிழமை வீட்டில் விறகு அடுப்பில் வெந்நீா் வைத்துள்ளாா். அப்போது, எதிா்பாராத விதமாக தீ பரவி குடிசை வீடு மற்றும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

Advertisement

தகவலறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments