முகப்பு
விழுப்புரம்

பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனத்தில் மனைவி இறந்த துக்கத்தில் பெயிண்டா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 11:07 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனத்தில் மனைவி இறந்த துக்கத்தில் பெயிண்டா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திண்டிவனம் டி.எம்.ஜி. நகரைச் சோ்ந்த ஜானகிராமன் மகன் குணசேகரன் (52), பெயிண்டா். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவரது மனைவி ஷீலா, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

இதனால், மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்த குணசேகரன் செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments