பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனத்தில் மனைவி இறந்த துக்கத்தில் பெயிண்டா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனத்தில் மனைவி இறந்த துக்கத்தில் பெயிண்டா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டிவனம் டி.எம்.ஜி. நகரைச் சோ்ந்த ஜானகிராமன் மகன் குணசேகரன் (52), பெயிண்டா். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவரது மனைவி ஷீலா, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா்.
இதனால், மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்த குணசேகரன் செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement